Posts

Showing posts from October, 2025

உலக அளவில் இளைஞர்களின் புரட்சி(Gen-Z)

Image
2025 ஆம் ஆண்டு, உலகம் இளைஞர்களின் (குறிப்பாக Gen Z தலைமுறையின்) புரட்சிகரமான இயக்கங்களால் ஆட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இது வெறும் போராட்டங்கள் அல்ல; ஊழல், வேலையின்மை, சமூக ஊடகத் தடைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் காலநிலை நெருக்கடிகளுக்கு எதிரான உலகளாவிய அழுத்தம். தென்கிழக்கு ஆசியாவில் இருந்து ஆப்பிரிக்காவும், லத்தீன் அமெரிக்காவும் வரை, இளைஞர்கள் தங்கள் குரலை எழுப்பி, அரசுகளை அகற்றி, மாற்றங்களை நிர்ப்பந்தித்துள்ளனர். இந்தப் புரட்சி சமூக ஊடகங்களால் இணைக்கப்பட்டு, "லீடர் இல்லாத" (leaderless) இயக்கங்களாக உருவெடுத்துள்ளது. இந்த இயக்கங்களை வைத்து சர்வதேச அரசியல் சூழ்ச்சிக்கும் பயன்படுகிறார்கள். இந்த சூழ்ச்சியில் சிக்குண்டு கிடப்பது கூட அறியாமல் புரட்சி என்ற பெயரில் வன்முறை ஆட்டங்களும் நடக்கிறது gen - z என்பது தற்காலிகமாக வைக்கப்பட்ட பெயர் தானே தவிர இது போன்ற இயக்கங்கள் பன் நெடுங்காலமாக வல்லாதிக்க நாடுகளுக்கு அடிபணிந்து தெற்காசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளில் புரட்சி என்ற பெயரில் அந்த நாட்டின் செல்வங்களை அபகரிக்க வல்லரசுகளாக இருக்கும் வல்லாதிக்க நாடுகள் நடத்தும் ஓர...

பெரியார் மணியம்மை

பெரியாரும் மணியம்மையும்            சமகால அரசியலில் பெரியாரைப் பற்றி விமர்சிக்கும் போதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ மணியம்மையாரின் தியாகத்தை கொச்சைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் இன்றைய அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள். 70 வயதில் பெரியாரின் கரம் பிடித்து 95 வரை கல அரசியலில் உச்சம் காண வைத்தவர் மணி அம்மையார். தமிழ்நாட்டில் பேசப்படாத ஒரு மிகச்சிறந்த அரசியல் ஆளுமை. இளமைக்காலம் கல்வி வேலூர் நகரம் முழுவதும் சுயமரியாதை கருத்துக்களை பரப்பிய தோழர் கனகசபைக்கும் பத்மாவதி தாயார் அவர்களுக்கும் 1920 மார்ச் 10ஆம் தேதி மகளாக காந்திமதி பிறந்தார். கனகசபையின் நெருங்கிய தோழரும் திராவிட தலைவர்களில் ஒருவருமான ‘அண்ணல் தங்கோ’ காந்திமதி என்ற பெயரை ‘அரசியல் மணி’ என்று மாற்றினார்.  சிறு வயதிலிருந்து சுயமரியாதை கருத்துக்களை தகப்பனாரிடம் கற்று வளர்ந்தவர் கல்வியிலும் கவனம் செலுத்தி தமிழ் இலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்றார் அரசியல் மணி. பெரியாரின் உடல்நலம் பெரியாரின் அன்புக்கு உகந்த கனகசபைக்கு கடிதம் எழுதுகிறார் தான் உடல்நலம் குன்றியுள்ளேன் தன்னை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள யாரும் இல...

ரத்தம் தோய்ந்த கைகள்

  இந்த கட்டுரையின் சாராம்சம் ஒரு நடிகரும் ஒரு ரசிகருக்கும் இடையிலான ஓர் பைத்தியக்காரத்தனமான ஈர்ப்பு இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட லட்சோப லட்ச குடும்பங்கள் தனது மகன்களை இழந்து தவிக்கின்றனர். ஒரு நடிகனுக்கு கடவுளுக்கு நிகராக அவனது பதாகைக்கு பால் அபிஷேகம் செய்து அங்கிருந்து கீழே விழுந்து இறந்தவர்கள் இந்தியாவில் மட்டுமே இது அதிகமாக நடக்கிறது. அதன் பின்னணியில் ஒரு நடிகன் அரசியல் கட்சி தொடங்குகிறான் அரசியல்வாதிக்கும் ஒரு திரை நட்சத்திரத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களை உணராத தொண்டன் கொள்கை பிடிப்புடன் செயல்பட மாட்டான் தொண்டனை அதாவது ரசிகனை தொண்டன் ஆக்குவது என்பது தலைவன் செய்யக்கூடிய வேலை இந்த வேலையை செய்வது என்பது அரசியலுக்கு வரும்போது தான் கொண்ட கொள்கையை சரியாக கொள்கை படுத்துவது அந்தக் கொள்கையின் வழியில் நடக்கும் தொண்டர்களை உருவாக்குவது ரசிகர்களை தொண்டர்களாக மாற்றுவது மிக மிகக் கடினமே அக்கடினமான செயல்களில் வெற்றி கண்டவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர். நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் எண்ணற்ற உயிர்களை காவு வாங்கி உள்ளது முதல் மாநாட்டில் ஏழு பேர் இரண்டாவது மதுரை மாநாட்டில் இரண்டு...